search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    விவசாயிகளுக்கு மத்திய அரசு அநீதி இழைத்து வருகிறது- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    உ.பி. செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் லக்கிம்பூர் செல்ல உள்ளதாக ராகுல் காந்தி கூறினார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

    * விவசாயிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது.

    * மத்திய அரசு விவசாயிகளை அவமதிப்பது மட்டுமன்றி அவர்களை கொலை செய்து வருகிறது.

    * உத்தரபிரதேசம் செல்ல எதிர்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் மற்ற கட்சிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    பிரதமர் மோடி

    * உத்தரபிரதேசத்தில் அபாயகரமான அரசியல் நடைபெற்று வருகிறது.

    * நேற்று லக்னோ சென்ற பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்கவில்லை.

    * லக்கிம்பூரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க உள்ளேன்.

    உ.பி. செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் லக்கிம்பூர் செல்ல உள்ளதாக ராகுல் காந்தி கூறினார்.


    Next Story
    ×