என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய-மாநில அரசுகள் இணைந்து கையாள வேண்டும்: நிர்மலா சீதாராமன்
Byமாலை மலர்6 Oct 2021 3:42 AM GMT (Updated: 6 Oct 2021 3:42 AM GMT)
பணமாக்கல் திட்டம் மூலம் நாட்டின் சொத்துகளை கொள்ளையடிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. அந்த கட்சியின் மரபணுவிலேயே ‘கொள்ளை’ இருக்கிறது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இந்தியாவின் பெட்ரோல், டீசல் தேவையில், 99 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. அதாவது, 100 லிட்டர் தேவை என்றால், 99 லிட்டர் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே, சர்வதேச சந்தையில் உள்ள விலை நிலவரத்துக்கு ஏற்ப இங்கு அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
ஆனால், பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு மட்டும் வரி விதிக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட தொகையை வரியாக மத்திய அரசு விதிக்கிறது. மாநில அரசுகள்தான், மதிப்பு கூட்டு வரி விதிக்கின்றன. எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய-மாநில அரசுகள் இணைந்து கையாள வேண்டும்.
பணமாக்கல் திட்டம் மூலம் நாட்டின் சொத்துகளை கொள்ளையடிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. அந்த கட்சியின் மரபணுவிலேயே ‘கொள்ளை’ இருக்கிறது. எனவே, கொள்ளையை தவிர வேறு எதை பற்றியும் நினைப்பது இல்லை.
காங்கிரஸ் ஆட்சியில் ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்கம் என எல்லாவற்றிலும் கொள்ளை நடந்தது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மெஜாரிட்டி இருந்தும், மக்களுக்கு எதுவும் செய்யாமல் ஆட்சியை காப்பாற்றுவதிலேயே காங்கிரஸ் கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இந்தியாவின் பெட்ரோல், டீசல் தேவையில், 99 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. அதாவது, 100 லிட்டர் தேவை என்றால், 99 லிட்டர் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே, சர்வதேச சந்தையில் உள்ள விலை நிலவரத்துக்கு ஏற்ப இங்கு அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அவற்றின் விலை உயர்வது, சாதாரண மக்களுக்கு நிச்சயமாக பெரிய சுமைதான்.
ஆனால், பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு மட்டும் வரி விதிக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட தொகையை வரியாக மத்திய அரசு விதிக்கிறது. மாநில அரசுகள்தான், மதிப்பு கூட்டு வரி விதிக்கின்றன. எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய-மாநில அரசுகள் இணைந்து கையாள வேண்டும்.
பணமாக்கல் திட்டம் மூலம் நாட்டின் சொத்துகளை கொள்ளையடிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. அந்த கட்சியின் மரபணுவிலேயே ‘கொள்ளை’ இருக்கிறது. எனவே, கொள்ளையை தவிர வேறு எதை பற்றியும் நினைப்பது இல்லை.
காங்கிரஸ் ஆட்சியில் ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்கம் என எல்லாவற்றிலும் கொள்ளை நடந்தது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மெஜாரிட்டி இருந்தும், மக்களுக்கு எதுவும் செய்யாமல் ஆட்சியை காப்பாற்றுவதிலேயே காங்கிரஸ் கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்?
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X