என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை வீரர்கள் பலி
Byமாலை மலர்2 Oct 2021 5:41 PM GMT (Updated: 2 Oct 2021 5:41 PM GMT)
உத்தரகாண்டில் திரிசூல சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இந்திய கடற்படை வீரா்கள் 6 போ் மாயமாகினா்.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள திரிசூல சிகரத்தில் இந்திய கடற்படையைச் சோந்த 10 பேர் கொண்ட குழு மலையேற்றத்தில் ஈடுபட்டது.
கடந்த செப்டம்பர் 3-ம் தேதி மும்பையில் இருந்து புறப்பட்ட இந்த குழு நேற்று திரிசூல மலையில் ஏற முற்பட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக
பனிச்சரிவு ஏற்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவம், இந்திய விமானப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டது. அதில் 5 வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மற்ற 5 வீரர்களும் மலையேற்ற உதவியாளரும் நேற்று காலை முதல் மாயமாயினர். எஞ்சிய வீரா்களையும் மலையேற்ற உதவியாளரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், உத்தரகாண்ட் பனிச்சரிவில் இருந்து 4 கடற்படை வீரர்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டு உள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். மாயமான 2 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X