என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட அரசு பேருந்து: 3 பேர் பலி
Byமாலை மலர்28 Sep 2021 10:50 PM GMT (Updated: 28 Sep 2021 10:50 PM GMT)
மகாராஷ்டிரா மாநில அரசு பேருந்து மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டதில் நடத்துனர் உயிரிழந்த நிலையில், டிரைவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மாரத்வாடா மற்றும் விதர்பாவின் சில இடங்களில் கனமழை பெய்தது. இதனால் எங்கு பார்த்தாலும் மழை வெள்ளமாக காட்சி அளித்தது. நாக்பூரில் இருந்து நண்டெட் என்ற இடத்திற்கு மகாராஷ்டிரா மாநில அரசு பஸ் பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் டிரைவர், நடத்துனர் தவிர நான்கு பயணிகள் இருந்தனர்.
பேருந்து உமர்கெட் தாலுகாவில் உள்ள தஹாகயோன் பாலத்தில் செல்லும்போது வெள்ளத்தில் பஸ் இழுத்துச் செல்லப்பட்டு கவிழ்ந்தது. இதில் ஆறு பேரும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். ஆறு பேரில் ஷரத் ஃபுல்மாலி (27), சுப்ரமணியன் டோக்லா (48) ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டனர்.
ஆனால் நடத்துனர் உள்ளிட்ட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் டிரைவரை காணவில்லை. அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X