search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்னல்
    X
    மின்னல்

    மத்திய பிரதேசத்தில் சோகம் - மின்னல் தாக்கி 6 பேர் பலி

    மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
    போபால்:

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. அங்குள்ள தேவாஸ் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

    மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்தார்.

    தேவாஸ் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 6 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×