என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் இதுவரை 22.52 கோடி பேருக்கு 2 ‘டோஸ்’ தடுப்பூசி
Byமாலை மலர்27 Sep 2021 1:54 AM GMT (Updated: 27 Sep 2021 1:54 AM GMT)
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வர தொடர்ந்து போராடும் இந்தியா, தடுப்பூசி போடும் பணியை விரைவு படுத்தி வருகிறது.
புதுடெல்லி :
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வர தொடர்ந்து போராடும் இந்தியா, தடுப்பூசி போடும் பணியை விரைவு படுத்தி வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணி முன்னுரிமை அடிப்படையில் தொடங்கியது. தற்போது 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 8 மாதங்கள் முடிந்துள்ள நிலையில், இதுவரையில் 85 கோடியே 60 லட்சத்து 81 ஆயிரத்து 527 ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 63 கோடியே 8 லட்சத்து 31 ஆயிரத்து 85 பேருக்கு ஒரு ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 2 ‘டோஸ்’ தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை 22 கோடியே 52 லட்சத்து 50 ஆயிரத்து 442 ஆகும்.
நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 68 லட்சத்து 42 ஆயிரத்து 786 ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 34 லட்சத்து 63 ஆயிரத்து 907 பேர் முதல் ‘டோஸ்’ போட்டுக்கொண்டவர்கள் ஆவார்கள். 2-வது ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை 33 லட்சத்து 78 ஆயிரத்து 879 ஆகும்.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வர தொடர்ந்து போராடும் இந்தியா, தடுப்பூசி போடும் பணியை விரைவு படுத்தி வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணி முன்னுரிமை அடிப்படையில் தொடங்கியது. தற்போது 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 8 மாதங்கள் முடிந்துள்ள நிலையில், இதுவரையில் 85 கோடியே 60 லட்சத்து 81 ஆயிரத்து 527 ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 63 கோடியே 8 லட்சத்து 31 ஆயிரத்து 85 பேருக்கு ஒரு ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 2 ‘டோஸ்’ தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை 22 கோடியே 52 லட்சத்து 50 ஆயிரத்து 442 ஆகும்.
நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 68 லட்சத்து 42 ஆயிரத்து 786 ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 34 லட்சத்து 63 ஆயிரத்து 907 பேர் முதல் ‘டோஸ்’ போட்டுக்கொண்டவர்கள் ஆவார்கள். 2-வது ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை 33 லட்சத்து 78 ஆயிரத்து 879 ஆகும்.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X