search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் போராட்டம்
    X
    விவசாயிகள் போராட்டம்

    முழு அடைப்புக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் - விவசாய சங்க தலைவர் வேண்டுகோள்

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    ஹலகூர்:

    ஹலகூரில் விவசாய சங்கத் தலைவர் பரத் ராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    மத்திய அரசு விவசாயிகள் பாதிக்கும் வகையில் வேளாண் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதேபோல் பெட்ரோல்-டீசல், கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 

    மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு சாதமாக செயல்பட்டு வருகிறது. வேளாண் சட்டத்திருத்தம் உள்ளிட்டவற்றை கண்டித்து திங்கட்கிழமை நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த முழு அடைப்புக்கு ஹலகூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×