search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபிஷேக் பானர்ஜி
    X
    அபிஷேக் பானர்ஜி

    பா.ஜனதா உ.பி.யில் தலிபான் ஸ்டைலில் ஆட்சி நடத்துகிறது: அபிஷேக் பானர்ஜி விமர்சனம்

    வெளிநபர்களுக்கு தலை வணங்காமல் மிக துணிச்சலுடன் போராடும் ஒரே கட்சி திரிணாமுல் காங்கிரஸ்தான் என அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியன் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி இன்று டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது ‘‘வெளிநபர்களுக்கு தலை வணங்காமல் மிக துணிச்சலுடன் போராடும் ஒரே கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான். நாங்கள் திரிபுரா, அசாம் சென்றடைந்துள்ளோம். கோவாவிற்கும் செல்ல இருக்கிறோம். ஆகவே, நீங்களாகவே தயாராகிக் கொள்ளுங்கள். அரசியல் ரீதியில் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

    உலக அமைதி மாநாட்டிற்கு மம்தா பானர்ஜி அழைக்கப்பட்டுள்ளார். மோடியைவிட அதிக பிரபலமாக மம்தா இருப்பதால், அவர்கள் அனுமதிக்கவில்லை. தற்போது உ.பி. சூழ்நிலையை பார்த்தீர்கள் என்றால், தலிபான் ஸ்டைலில் பா.ஜனதா ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அங்குள்ள மக்களுக்கு சுதந்திரம் இல்லை. எல்லாவற்றையுமே யோகி ஆதித்யநாத்துதான் முடிவு செய்து கொண்டிருக்கிறார்’’ என்றார்.
    Next Story
    ×