search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பெண்களுக்கு நாளை சிறப்பு தடுப்பூசி முகாம்

    மும்பை மாநகராட்சி சார்பில் 18 வயது நிரம்பிய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மேலும் கல்லூரிகளை திறப்பது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட உள்ளது.

    இந்தநிலையில் மும்பை மாநகராட்சி சார்பில் 18 வயது நிரம்பிய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் நாளை (திங்கட்கிழமை) பெண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தடுப்பூசி போடப்படுகிறது.

    நாளை மறுநாள் (செவ்வாய்) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. 3 மணி முதல் இரவு 9 மணி வரை 2-வது டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இதில் மேற்கூறப்பட்டவர்கள் முன்பதிவு செய்யாமல் நேரடியாக மையங்களுக்கு சென்று தடுப்பூசி போடலாம்.

    ஆசிரியர்கள், மாணவர்கள் தடுப்பூசி போட அடையாள அட்டையுடன் வர வேண்டும் எனவும் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
    Next Story
    ×