என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
யானையை மீட்கும் பணியில் ஈடுபட்ட செய்தி புகைப்படக்காரர் நீரில் மூழ்கி பலி: ஒடிசாவில் பரிதாபம்
Byமாலை மலர்24 Sep 2021 1:26 PM GMT (Updated: 24 Sep 2021 1:26 PM GMT)
ஒடிசாவில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட யானையை மீட்கும் பணியில் வீரர்களுடன் ஈடுபட்ட செய்தி புகைப்படக்காரர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் மகாநதி ஆறு ஓடுகிறது. முண்டாலி என்ற பகுதியில் யானை ஒன்று மகாநதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஒடிசா பேரிடர் விரைவு மீட்புக்குழு யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டது. அவர்களுடன் செய்தி புகைப்படக்காரர் அரிந்தம் என்பவரும் ஈடுபட்டார்.
யானை ஆற்றின் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டதால், மீட்புக்குழு படகில் சென்றது. அப்போது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் செய்தி புகைப்படக்காரர் அரிந்தம் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அதிரடி மீட்புக் குழுவில் உள்ள வீரர் ஒருவர் ஆபத்தான நிலையில் ஐ.சி.யூ. வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் 3 வீரர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X