search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    என்னை தொடர்ந்து முதலமைச்சராக பார்க்க விரும்பினால், மழை பெய்தாலும் வாக்களிக்க வாருங்கள்: மம்தா பானர்ஜி

    மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த மம்தா பானர்ஜி, முதல்-அமைச்சரான பிறகு இடைத்தேர்தலில் களம் இறங்கியுள்ளார்.
    மேற்கு வங்காளத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற 30-ம்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  பவானிப்பூர் தொகுதியில் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், பவானிப்பூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.  அப்போது அவர் பேசுகையில், ‘‘பவானிப்பூர் ஒரு மினி இந்தியா ஆகும். பல்வேறு சமூகத்தினர் இங்கு வசிக்கின்றனர். இந்த தொகுதியில் நான் 6 முறை வெற்றி பெற்றுள்ளேன். உங்களுடைய முதல்வராக என்னை தொடர்ந்து பார்க்க விரும்பினால் மழை பெய்தால் கூட வீட்டை விட்டு வெளியே வந்து வாக்களியுங்கள்’’ என்றார்.
    Next Story
    ×