search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயம் அடைந்த போலீஸ்காரர்
    X
    காயம் அடைந்த போலீஸ்காரர்

    அசாமில் வன்முறையாக மாறிய எதிர்ப்புப் போராட்டம்: 9 போலீசார் காயம்- இரண்டு பேர் உயிரிழப்பு

    ஆக்கிரமிப்பை அகற்றும்போது எதிர்ப்பாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதில் 9 போலீசார் காயம் அடைந்தனர். 2 பேர் துபாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.
    அசாம் மாநிலம் தராங்கில் உள்ள சிபாஜ்ஹார் என்ற இடத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சுமார் 500 குடும்பத்தினருக்கு  மேற்பட்டோர் வசித்து வந்தனர். அரசு அந்த நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்தது. கடந்த திங்கட்கிழமை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதில் ஒரு பகுதியை மீட்டது.

    மீதமுள்ள பகுதியை மீட்பதற்காக அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரத்துடன் சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பை அகற்ற அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது போலீசாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கற்கள் வீசப்பட, போலீசார் தடியடி நடத்தினர். இதனால் வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள வீசி வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர்.

    காயம் அடைந்த போலீஸ்காரர்கள்

    அந்த முயற்சி தோல்வியடைந்த துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இருவர் உயிரிழந்தனர். போலீஸ் தரப்பில் 9 பேர் காயமடைந்தனர்.
    Next Story
    ×