என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெங்களூரு பட்டாசு குடோனில் வெடிவிபத்து- 3 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்23 Sep 2021 10:47 AM GMT (Updated: 23 Sep 2021 11:30 AM GMT)
பட்டாசுகளை கையாளும்போது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பெங்களூரு துணை கமிஷனர் ஹரிஷ் பாண்டே தெரிவித்தார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு, நியூ தரகுபேட்டை பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் இன்று திடீரென விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினர். பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதுபற்றி பெங்களூரு (தெற்கு) துணை கமிஷனர் ஹரிஷ் பாண்டே கூறுகையில், ‘சுமார் 80 பட்டாசு பெட்டிகள் இங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளன. எத்தனை வெடித்தன என்பதை சரிபார்க்க வேண்டும். இது பட்டாசுகளை கையாளும்போது ஏற்பட்ட விபத்து போன்று தெரிகிறது. தடயவியல் நிபுணர் குழு தடயங்களை சேகரித்து அளிக்கும் தகவலைத் தொடர்ந்து விபத்துக்கான காரணம் தெரியவரும்” என்றார்.
பட்டாசு சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோன், போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமானது. போக்குவரத்து நிறுவன குடோனில் வெடிபொருட்கள் வைக்க அனுமதி இல்லை என்றும் துணை கமிஷனர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X