என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுகாதாரத் துறை மந்திரியின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
Byமாலை மலர்23 Sep 2021 6:28 AM GMT (Updated: 23 Sep 2021 6:28 AM GMT)
மந்திரி டி.எஸ். தியோவின் ஆதரவாளர்கள் என்பதால் வழக்கு போடப்படுவதாக எம்எல்ஏ ஷைலேஷ் பாண்டே குற்றம்சாட்டினார்.
பிலாஸ்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் கோத்வாலி காவல் நிலையத்திற்கு வெளியே, மாநில சுகாதாரத்துறை மந்திரி டி.எஸ்.சிங் தியோவின் ஆதரவாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ பணியாளரிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் பங்கஜ் சிங் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டதைக் கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அரசு மருத்துவமனை ஊழியர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குபதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாகவும் மாவட்ட எஸ்.பி. தீபக் ஜா கூறினார்.
போலீஸ் நடவடிக்கையானது துரதிர்ஷ்டவசமானது என்றும், மந்திரி டி.எஸ்.தியோவின் ஆதரவாளர்கள் என்பதால் வழக்கு போடப்படுவதாகவும் எம்எல்ஏ ஷைலேஷ் பாண்டே குற்றம்சாட்டினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X