search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    இந்தியாவில் புதிதாக 31,923 பேருக்கு கொரோனா தொற்று

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,28,15,731 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 31,990 பேர் குணமடைந்துள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் ஒரே நாளில் 282 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,46,050 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,28,15,731 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 31,990 பேர் குணமடைந்துள்ளனர்.

    கொரோனா தடுப்பூசி
     
    நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,01,604 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 83,39,90,049 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


    Next Story
    ×