search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி 23-ந்தேதி குளோபல் சி.இ.ஓ.-க்களை சந்திக்கிறார்

    ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காகவும், குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும் பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.
    பிரதமர் மோடி இரண்டு முக்கிய நிகழ்ச்சியில் (ஐ.நா. பொதுக்கூட்டம், குவாட் உச்சி மாநாடு) கலந்து கொள்வதற்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். இரண்டு நிகழ்ச்சிகளையும் தவிர்த்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச இருக்கிறார்.

    இந்த நிலையில் நாளை குளோபல் சி.இ.ஓ.-க்களை (உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகள்) சந்திக்க இருக்கிறார். மோடி உடனான சந்திப்பில் குவல்காம், அடோப், பர்ஸ்ட் சோலார், ஜெனரல் ஆட்டோமிக்ஸ், பிளாக்ஸ்டோன் நிறுவன தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
    Next Story
    ×