search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி முகாம்
    X
    தடுப்பூசி முகாம்

    புதிய மைல்கல்... இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 80 கோடியை தாண்டியது

    நாட்டில் கடந்த 11 நாள்களில் மட்டும் 10 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16-ந்தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் தடுப்பூசி தொடர்பான அச்சம், தடுப்பூசி கிடைப்பதில் தாமதம் போன்ற காரணங்களால் குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல் 10 கோடி தடுப்பூசி போடுவதற்கு 83 நாட்கள் ஆனது. அதன்பின்னர் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெறுகிறது.

    இதனால் 2-வது 10 கோடி தடுப்பூசி 45 நாட்களிலும், 3-வது 10 கோடி தடுப்பூசி 29 நாட்களிலும், 4-வது 10 கோடி  24 நாட்களிலும், 5-வது 10 கோடி தடுப்பூசி 20 நாட்களிலும் எட்டிப்பிடித்து ஆகஸ்ட் 7ம்தேதி 50 கோடி என்ற நிலையை எட்டியது. செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் 25ம் தேதி 60 கோடியை கடந்தது. 

    இந்நிலையில், நாடு முழுவதும் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை இன்று 80 கோடியை கடந்துள்ளது. இதுதொடா்பாக சுகாதாரத்துறை அமைச்சகம்  வெளியிட்ட அறிக்கையில், ''நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80.33 கோடியை எட்டியது. கடந்த 11 நாள்களில் மட்டும் 10 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. நேற்று ஒரே நாளில் 77.25 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80 கோடியை கடந்ததற்கு மருத்துவப் பணியாளா்களுக்கும், பொதுமக்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பாராட்டு தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×