என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாளை முதல் மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு
Byமாலை மலர்19 Sep 2021 1:21 AM GMT (Updated: 19 Sep 2021 1:21 AM GMT)
வங்காளா விரிகுடா கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த சுழற்சி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மும்பை:
மராட்டியத்தில பருவமழைக்காலம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக மும்பையில் ஆங்காங்கே சிறிய அளவில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் மும்பை மற்றும் விதர்பா மண்டலத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “வங்காளா விரிகுடா கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த சுழற்சி உருவாகி உள்ளது. இது மேலும் தீவிரமடையும் என்பதால் வருகிற 20-ந் தேதி முதல் மராட்டியத்தில் கனமழை பெய்யும்.
விதர்பா மண்டலத்தில் முதலில் மழை தொடங்கும். ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. இதை தொடர்ந்து வடக்கு மராட்டியத்தில் உள்ள பால்கர், தானே மற்றும் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும் என கூறினார்.
இதையும் படியுங்கள்...தமிழகத்தின் சிலம்பம் விளையாட்டுக்கு அங்கீகாரம் வழங்கியது மத்திய அரசு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X