என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜார்க்கண்டில் சோகம் - விஸ்வகர்மா சிலையை கரைத்தபோது தண்ணீரில் மூழ்கி 7 பேர் பலி
Byமாலை மலர்18 Sep 2021 6:11 PM GMT (Updated: 18 Sep 2021 6:11 PM GMT)
ஜார்க்கண்டில் விஸ்வகர்மா சிலையை குளத்தில் கரைத்தபோது நீரில் மூழ்கி சிறுமி உள்பட 7 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.
சண்டிகர்:
நவராத்திரி கடைசி நாளில் சரஸ்வதி - ஆயுத பூஜை கொண்டாடுவதுபோல், வட இந்திய மாநிலங்களான திரிபுரா, அசாம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் விநாயக சதுர்த்தி முடிந்த சில நாட்களுக்குப் பிறகு வெகு கோலாகலமாக வணங்கப்படும் ஆயுத பூஜை விழாவுக்கு ‘விஸ்வகர்மா பூஜை’ என்று பெயர்.
புராண கால தேவலோகச் சிற்பி, சிறந்த கட்டிடக் கலை நிபுணர், பொறியியல் வல்லுநர், தொழில் படைப்பாற்றலுக்கான தெய்வம் என அழைக்கப்படுபவர் விஸ்வகர்மா.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் லத்தேர் மாவட்டம், பிக்ரு கிராமத்தில் உள்ள குளம் ஒன்றில் இன்று காலை விஸ்வகர்மா சிலையை அப்பகுதி மக்கள் அரைத்தனர். அப்போது சிறுமி உள்பட 7 பெண்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீரில் மூழ்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்...பிரதமர் மோடி பெற்ற பரிசுகள், நினைவுப் பொருட்கள் ஏலம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X