search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே
    X
    உத்தவ் தாக்கரே

    பா.ஜனதாவுடன் மீண்டும் சிவசேனா கூட்டணி? உத்தவ்தாக்கரே கருத்தால் சர்ச்சை

    அவுரங்கபாத்தில் நடந்த ஒரு விழாவில் முதல்-மந்திரி உத்தவ்தாக்கரேவுடன் மத்திய மந்திரிகள் ராவ்சாகேப் தன்வே மற்றும் பகவத் சரத் இருவரும் கலந்து கொண்டனர்.

    மும்பை:

    மராட்டிய மாநிலத்தில் தற்போது உத்தவ்தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    பாரதிய ஜனதா கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த சிவசேனா அந்த கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் அணியில் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் செயல்பாடுகளில் முதல்-மந்திரி உத்தவ்தாக்கரேவுக்கு கடும் அதிருப்தி நிலவுகிறது. என்றாலும் அவர் சிவசேனா- காங்கிரஸ் கூட்டணி தொட ரும் என்று கூறி வருகிறார்.

    சில மாதங்களுக்கு முன்பு சிவசேனா மீண்டும் பா.ஜ.க. கூட்டணியில் சேரும் என்று தகவல் வெளியானது. ஆனால் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் இதை திட்ட வட்டமாக மறுத்தனர்.

    இந்த நிலையில் அவுரங்கபாத்தில் நடந்த ஒரு விழாவில் முதல்-மந்திரி உத்தவ்தாக்கரேவுடன் மத்திய மந்திரிகள் ராவ்சாகேப் தன்வே மற்றும் பகவத் சரத் இருவரும் கலந்து கொண்டனர். அந்த விழாவில் உத்தவ்தாக்கரே பேசுகையில், “இந்த விழாவில் என்னுடன் பங்கேற்றுள்ள எனது முன்னாள் தோழர்களை வரவேற்கிறேன். நாங்கள் ஒருங்கிணைந்தால் இவர்கள் எதிர்கால தோழர்களாக இருப்பார்கள்” என்றார்.

    உத்தவ்தாக்கரேயின் இந்த பேச்சு மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தவ் தாக்கரே பா.ஜ.க. மத்திய மந்திரிகளை எதிர்கால நண்பர்கள் என்று குறிப்பிட்டதன் மூலம் எதிர்வரும் காலங்களில் சிவசேனா கூட்டணியை மாற்றிக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக சூசகமாக தெரிய வந்துள்ளது.

    கோப்புபடம்

    அந்த விழாவில் முதல்- மந்திரி உத்தவ்தாக்கரே பேசுகையில், எனக்கு ரெயில்வே இலாகா மிகவும் பிடிக்கும். ரெயில்கள் தங்களது பாதையை மாற்ற இயலாது. ஆனால் மாற்றுப்பாதையில் இயக்கினால் நமது நிலையத்துக்கு வந்து விடலாம். ரெயில் என்ஜின் ஒருபோதும் தண்டவாளத்தை மாற்றிக் கொள்ளாது என்றார்.

    உத்தவ்தாக்கரேயின் இந்த சூசகமான பேச்சு அவர் கூட்டணி மாறுவதை கருத்தில் கொண்டு பேசுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிவசேனாவுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    இதையும் படியுங்கள்...ஒரே அறையில் ரகசிய வாழ்க்கை- 11 ஆண்டுக்குப் பின் காதலரை கரம்பிடித்த பெண்

    Next Story
    ×