search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலா சீதாராமன்
    X
    நிர்மலா சீதாராமன்

    பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரப்படமாட்டாது: நிதியமைச்சர் தகவல்

    பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வருவதற்கான நேரம் இதுவல்ல என உயர்நீதிமன்றம் தெரிவிக்க முடிவு எடுக்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 45-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பின்னர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார். அப்போது ‘‘பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரப்படாது.

    ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வருவதற்கான நேரம் இதுவல்ல என்று உயர்நீதிமன்றம் தெரிவிக்க இருக்கிறோம். ஜி.எஸ்.டி.-க்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்கள் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரக்கூடாது என கருத்து தெரிவித்தனர்’’ என்றார்.
    Next Story
    ×