search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுரேஷ் கோபி
    X
    சுரேஷ் கோபி

    எனக்கு ஏன் ‘சல்யூட்’ அடிக்கவில்லை?- போலீஸ் அதிகாரியிடம் சுரேஷ்கோபி கேட்டதால் சர்ச்சை

    போலீசாரிடம் ‘சல்யூட்’ கோரி சர்ச்சையில் சிக்கியுள்ள சுரேஷ்கோபி, பல திரைப்படங்களில் அதிரடியான போலீஸ் அதிகாரி வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    திரிச்சூர் :

    கேரளாவில் பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி.யாக இருப்பவர் பிரபல நடிகர் சுரேஷ்கோபி. அவர் திரிச்சூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட புத்தூர் கிராமத்தை பார்வையிட நேற்று சென்றார். அப்போது ஒரு ஜீப்பில் அமர்ந்திருந்த போலீசார், சுரேஷ்கோபியை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. உடனே அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டரிடம், ‘நான் ஒன்றும் மேயரல்ல, எம்.பி... எனக்கு ஏன் ‘சல்யூட்’ வைக்கவில்லை? நீங்கள் ‘சல்யூட்’ வைக்க வேண்டும்’ என்று கூறினார். இதுதொடர்பான வீடியோ செய்தி சேனல்களில் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது.

    இந்நிலையில் சுரேஷ்கோபி தான் கேட்டதை நியாயப்படுத்தும் விதமாக, ‘நான் அந்த சப்-இன்ஸ்பெக்டரை ‘சார்’ என்று மரியாதையாய் அழைத்து, எம்.பி.யான எனக்கு ‘சல்யூட்’ வைக்கலாமே? என்று மென்மையாகத்தான் கூறினேன்’ என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கேரள போலீஸ் அதிகாரிகள் சங்கம், சட்டப்பூர்வமாக தகுதிவாய்ந்தவர்களுக்குத்தான் ‘சல்யூட்’ வைப்பது போலீசின் வழக்கம் என கூறியுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அந்த பட்டியலின் கீழ் வரமாட்டார்கள் என்றாலும், ஒரு மரியாதை அடிப்படையில் அவர்களுக்கு போலீசார் வணக்கம் செலுத்துவது வழக்கம் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

    இந்த ஆண்டு ஜூலையில், திரிச்சூர் மாநகராட்சி மேயர் எம்.கே.வர்க்கீஸ், தங்களுக்கு போலீசார் ‘சல்யூட்’ வைக்க வேண்டும் என்ற மாநில டி.ஜி.பி.யிடம் கோரிக்கை விடுத்தார்.

    தற்போது போலீசாரிடம் ‘சல்யூட்’ கோரி சர்ச்சையில் சிக்கியுள்ள சுரேஷ்கோபி, பல திரைப்படங்களில் அதிரடியான போலீஸ் அதிகாரி வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×