என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண் குழந்தை பிறந்ததை விமரிசையாக கொண்டாடிய வியாபாரி
Byமாலை மலர்14 Sep 2021 5:09 AM GMT (Updated: 14 Sep 2021 6:45 AM GMT)
பெண் குழந்தை பெற்ற அனைவருமே அதிர்ஷ்டசாலிகள் என போபாலை சேர்ந்த பானிபூரி வியாபாரி தெரிவித்துள்ளார்.
போபால்:
என்னதான் நாகரீக உலகத்திற்கு வந்துவிட்டாலும் பெண் குழந்தைகள் பிறப்பதை வெறுப்பது நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் மத்திய பிரதேச மாநிலத்தில் பானிபூரி வியாபாரி ஒருவர், தனக்கு பெண் குழந்தை பிறந்ததை வெகு விமரிசையாக கொண்டாடி இருக்கிறார். போபாலை சேர்ந்த இந்த வியாபாரியின் பெயர் அஞ்சல் குப்தா (வயது 28).
சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பானிபூரிகளை அவர் கொடுத்தார். பலரும் அதை வாங்கி சாப்பிட்டு வாழ்த்திவிட்டு சென்றனர்.
இதுதொடர்பாக அஞ்சல் குப்தா கூறும்போது, ‘‘பிறக்கும் குழந்தைகளில் ஆண், பெண் என்று பேதம் பார்க்கக்கூடாது. இதை அனைத்து மக்களும் கடைபிடிக்க வேண்டும். இதற்காகத்தான் நான் எனது மகள் பிறந்ததை கொண்டாடும் வகையில் பானிபூரியை இலவசமாக வழங்கினேன்.
என்னதான் நாகரீக உலகத்திற்கு வந்துவிட்டாலும் பெண் குழந்தைகள் பிறப்பதை வெறுப்பது நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் மத்திய பிரதேச மாநிலத்தில் பானிபூரி வியாபாரி ஒருவர், தனக்கு பெண் குழந்தை பிறந்ததை வெகு விமரிசையாக கொண்டாடி இருக்கிறார். போபாலை சேர்ந்த இந்த வியாபாரியின் பெயர் அஞ்சல் குப்தா (வயது 28).
இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மகள் பிறந்ததை கொண்டாடும் வகையில் அஞ்சல் குப்தா பானிபூரியை பொது மக்களுக்கு இலவசமாக வழங்கினார்.
இதுதொடர்பாக அஞ்சல் குப்தா கூறும்போது, ‘‘பிறக்கும் குழந்தைகளில் ஆண், பெண் என்று பேதம் பார்க்கக்கூடாது. இதை அனைத்து மக்களும் கடைபிடிக்க வேண்டும். இதற்காகத்தான் நான் எனது மகள் பிறந்ததை கொண்டாடும் வகையில் பானிபூரியை இலவசமாக வழங்கினேன்.
பெண் குழந்தை பிறந்ததை அறிந்த சில உறவினர்கள், ‘‘உனக்கு பொருளாதார சுமை ஏற்படும்’’ என்று கூறினார்கள். அதை பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. பெண் குழந்தை பெற்ற அனைவருமே அதிர்ஷ்டசாலிகள்’’ என்று கூறினார்.
இதையும் படியுங்கள்... இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 25,404 பேருக்கு தொற்று
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X