என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திரிபுராவில் பா.ஜ.க. அரசுக்கு எதிராக வருகிற 15-ந்தேதி திரிணாமுல் காங்கிரஸ் பேரணி
Byமாலை மலர்11 Sep 2021 10:53 PM GMT (Updated: 11 Sep 2021 10:53 PM GMT)
திரிபுராவின் தற்போதைய சூழலை திரிணாமுல் காங்கிரஸ் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தெரிவித்துள்ளது.
கவுஹாத்தி:
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் முதல்-மந்திரி பிப்லப் குமார் தேவ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-பா.ஜ.க. கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து, அகர்தலாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் தாக்கப்பட்டனர். அக்கட்சியின் இரு அலுவலகங்கள், வாகனங்கள் ஆகியவற்றுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதனை பா.ஜ.க. மறுத்துள்ளது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்கள் மீது தாக்குதல் நடந்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் பொது செயலர் அபிஷேக் பானர்ஜி தலைமையில் வருகிற 15ந்தேதி, திரிபுராவின் அகர்தலா நகரில் கண்டன பேரணி நடைபெற உள்ளது.
எனினும், திரிபுராவின் தற்போதைய சூழலை திரிணாமுல் காங்கிரஸ் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்...கோழிக்கோடு விமான விபத்துக்கான காரணம் என்ன? - வெளியான அதிர்ச்சி தகவல்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X