என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
இளம்பெண்ணுக்கு மது கொடுத்து கற்பழித்த கும்பல் - நண்பர்கள் 2 பேர் கைது
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ளது அந்தோளி. இங்கு வசித்து வருபவர் அஜ்நாஸ் (வயது 30). இவருடைய நண்பர் பகத் (31). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் 2 பேரும் மற்ற 2 நண்பர்களுடன் கோழிக்கோட்டில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர்.
இந்த நிலையில் கொல்லத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு அஜ்நாசுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணை அவர் உடனடியாக புறப்பட்டு கோழிக்கோடு வர கூறினார். அந்தப் பெண் நேற்று காலை கோழிக்கோடு வந்து சேர்ந்தார். அவரை அஜ்நாஸ் மற்றும் அவரது நண்பர் ஓட்டல் அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.
அங்கு அந்தப் பெண்ணுக்கு 4 பேரும் சேர்ந்து மதுவில் போதை மருந்து கலக்கி கொடுத்தனர். இதனால் அந்த பெண் மயங்கி விழுந்தார். அப்போது 4 பேரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை கற்பழித்தனர்.
இதனால் அந்த இளம்பெண்ணின் நிலைமை மோசமானது. இதை அறிந்த மற்ற நண்பர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இந்த இளம்பெண் இறந்து விடுவாளோ என்ற பயத்தில் அஜ்நாஸ் மற்றும் பகத் அந்த இளம்பெண்ணை கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இளம்பெண்ணை பரிசோதனை செய்த டாக்டர் பெண் கற்பழிக்கபட்டு இருந்ததை கண்டு கோழிக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து ஆஸ்பத்திரியில் இருந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்