என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் இன்று 25,010 பேருக்கு கொரோனா பாதிப்பு -முதல்வர் தகவல்
Byமாலை மலர்10 Sep 2021 1:11 PM GMT (Updated: 10 Sep 2021 1:11 PM GMT)
கேரளாவில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், இது குறித்து நிபுணர்களிடம் ஆலோசனை நடத்துவதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், கேரளாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. கொரோனா பாதிப்புடன் நிபா வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 25010 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிப்பு விகிதம் 16.35 சதவீதமாக இருப்பதாகவும் மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இன்று ஒரே நாளில் 177 பேர் பலியாகி உள்ளனர். மாநிலம் முழுவதும் 2,37,643 நபர்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கொரோனா தொற்று மற்றும் நிபா வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தல் நீடிப்பதால், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், இது குறித்து நிபுணர்களிடம் ஆலோசனை நடத்துவதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X