என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைப்பு- திரிபுராவில் பதற்றம்
Byமாலை மலர்8 Sep 2021 3:23 PM GMT (Updated: 8 Sep 2021 3:23 PM GMT)
திரிபுராவின் சில பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது.
அகர்தலா:
திரிபுரா மாநில தலைநகர் அகர்தலா மற்றும் சில மாவட்டங்களில் இன்று கடும் வன்முறை ஏற்பட்டது. இதில் அகர்தலாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகம் மற்றும் கிளை அலுவலகம் ஆகியவற்றுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
திரிபுராவின் சில பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அகர்தலாவில் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியால் பிரச்சனை உருவானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களை கடந்து பேரணி சென்றபோது வன்முறை ஏற்பட்டுள்ளது.
பாஜகவினர் மார்க்சிஸ்ட் அலுவலகங்களுக்கு தீ வைத்ததாக அக்கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதேபோல், மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் இருந்து வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக பாஜக கூறி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X