search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    ஒரே நாளில் ஒரு கோடி கொரோனா தடுப்பூசி - 11 நாட்களில் 3வது முறையாக சாதனை

    நாட்டில் இதுவரை 69.68 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

    அதன்பின், கடந்த ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

    இந்நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் 1 கோடிக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசிகள் இன்று செலுத்தப்பட்டு உள்ளன. கடந்த 11 நாட்களில் 3வது முறையாக இந்த இலக்கு அடையப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகையில், இந்தியாவில் இதுவரை 69.68 கோடி (69,68,96,328) கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தது.
    Next Story
    ×