search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதிமன்றம்
    X
    நீதிமன்றம்

    பொதுமக்களை இப்படி அழைக்கக்கூடாது- போலீசாருக்கு உத்தரவிட்ட ஐகோர்ட்

    பொதுமக்களை அநாகரீகமாக நடத்துவதை நாகரீக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சேர்தலா பகுதியை சேர்ந்தவர் அணில் குமார். வியாபாரியான இவர் கொச்சியில் உள்ள கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 16 வயது மகளுடன் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்ததாகவும் அப்போது தன்னை வழிமறித்த சேர்தலா போலீசார்  விசாரணை என்ற பெயரில் அவமரியாதை செய்ததாகவும் “வா, போ” என மகளின் முன் அழைத்து இழிவாக பேசியதாகவும் பொது மக்களை கவுரவமாக நடத்த போலீசாருக்கு கோர்ட் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை  நீதிபதி தேவன் ராமச்சந்திரன் விசாரித்து தீர்ப்பளித்தார். அதில், போலீசார் பொதுமக்களை பல்வேறு இடங்களில் மிகவும் மோசமாக நடத்துவதாக புகார்கள் உள்ளது. ஆனால், எக்காரணம் கொண்டும் பொதுமக்களை போலீசார் தரக்குறைவான வகையில் நடத்தக்கூடாது.

    போலீசாரின் முன்னால் வரும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் நீதியை நாடியே வருகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் போலீசார் மரியாதையுடன் நடத்தவேண்டும். மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்தி அழைத்து விசாரிக்க வேண்டும்.

    பொதுமக்களை அநாகரீகமாக நடத்துவதை நாகரீக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, கேரள முழுவதும் போலீசார் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை “வா, போ” என்று ஒருமையில் அழைத்து பேச கூடாது. பெண்களை “வாடி போடி” என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி அழைக்கக்கூடாது. இது தொடர்பாக கேரள போலீஸ் டி.ஜி.பி. அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் இதுகுறித்து உடனடியாக கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.


    Next Story
    ×