என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சித்துவை சந்தித்து பேச ராகுல், பிரியங்கா மறுப்பு
புதுடெல்லி:
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக அமரீந்தர் சிங் உள்ளார். சமீபத்தில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத்சிங் சித்து நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், கட்சி தலைவர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் அமரீந்தர் சிங்குக்கு எதிராக சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.
நவ்ஜோத்சிங் சித்து தனக்கு இரண்டு ஆலோசகர்களை நியமித்துக் கொண்டார். அவர்கள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து பஞ்சாப் மாநில மேலிட பொறுப்பாளர் ஹரீஷ்ராவத், சண்டிகருக்கு சென்று கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வர் அமரீந்தர்சிங்கையும் சந்தித்து பேசினார். மேலும் சித்துவின் ஆலோசகர்களின் நடவடிக்கைகளையும் கண்டித்தார்.
இந்த நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரசில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் நவ்ஜோத்சிங் சித்து திடீரென்று டெல்லிக்கு சென்றார். அவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை சந்திக்க சென்றதாக தகவல் வெளியானது.
ஆனால் நவ்ஜோத்சிங் சித்துவை சந்திக்க ராகுல் காந்தி, பிரியங்காகாந்தி மறுத்து விட்டதாக தெரிகிறது. அவர்கள் சித்துவுக்கு நேரம் ஒதுக்கி தரவில்லை. இதனால் ராகுல்-பிரியங்காவை சந்திக்காமல் டெல்லியில் இருந்து நவ்ஜோத்சிங் சித்து திரும்பினார்.
பஞ்சாப் காங்கிரசில் பிரச்சினை நிலவி வரும் நிலையில் சித்துவை சந்திக்க ராகுல்-பிரியங்கா மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... கொரோனா அறிகுறி இருந்தால் தமிழகத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்