என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாட வேண்டும்- பொதுமக்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்
Byமாலை மலர்3 Sep 2021 7:13 AM GMT (Updated: 3 Sep 2021 7:13 AM GMT)
18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 16 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் 2 தவணைகளையும் செலுத்தி உள்ளனர். 54 சதவீதம் பேர் ஒரு தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்.
சென்னை:
நாடுமுழுவதும் மே மாதம் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவி பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஜூன், ஜூலை மாதத்தில் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து கட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. தற்போது பண்டிகை காலங்கள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகள் நெருங்கி வரும் சூழலில் கொரோனா தொற்று அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
இதையடுத்து பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
38 மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் 5 முதல் 10 சதவீதமாக உள்ளது. டெல்டாபிளஸ் கொரோனா வைரசால் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 16 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் 2 தவணைகளையும் செலுத்தி உள்ளனர். 54 சதவீதம் பேர் ஒரு தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்.
சிக்கிம், இமாச்சல பிரதேசம், தாத்ரா-நாகர் ஹவேலி ஆகிய பகுதிகளில் உள்ள 18 வயதை கடந்த அனைவரும் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருகிறது.
அதேவேளையில் கொரோனா தொற்றின் 3-வது அலை பரவ வாய்ப்பு இருப்பதாகவும் சுகாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாட வேண்டும்.
கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசியை தாமாக முன் வந்து பொதுமக்கள் அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.
கூட்டங்களில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் 2 தவணை தடுப்பூசிகளையும் கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும்.
நாடுமுழுவதும் மே மாதம் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவி பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஜூன், ஜூலை மாதத்தில் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து கட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. தற்போது பண்டிகை காலங்கள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகள் நெருங்கி வரும் சூழலில் கொரோனா தொற்று அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
இதையடுத்து பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனா தொற்று பரிசோதனை- பாதிப்பு விகிதம் வார அடிப்படையில் குறைந்து வந்தாலும் தொற்றின் 2-வது அலை பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்தியாவில் உள்ள 39 மாவட்டங்களில் பரிசோதனை-பாதிப்பு விகிதம் வாரத்துக்கு 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
38 மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் 5 முதல் 10 சதவீதமாக உள்ளது. டெல்டாபிளஸ் கொரோனா வைரசால் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 16 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் 2 தவணைகளையும் செலுத்தி உள்ளனர். 54 சதவீதம் பேர் ஒரு தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்.
சிக்கிம், இமாச்சல பிரதேசம், தாத்ரா-நாகர் ஹவேலி ஆகிய பகுதிகளில் உள்ள 18 வயதை கடந்த அனைவரும் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருகிறது.
அதேவேளையில் கொரோனா தொற்றின் 3-வது அலை பரவ வாய்ப்பு இருப்பதாகவும் சுகாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாட வேண்டும்.
கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசியை தாமாக முன் வந்து பொதுமக்கள் அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.
கூட்டங்களில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் 2 தவணை தடுப்பூசிகளையும் கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X