search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதிமன்றம்
    X
    நீதிமன்றம்

    மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை

    கேரளாவில் 3 ஆண்டுகளாக மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து பத்தினம்திட்டா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம், பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு  உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    மாணவியை உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள்  அவரை பரிசோதித்த போது சிறுமிக்கு பாலியல் தொல்லை நடந்திருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக  குழந்தைகள் நல ஆணைய குழுவினர் சிறுமிக்கு  கவுன்சிலிங் அளித்தனர். பின்னர் அவரிடம் விசாரித்த போது  சிறுமியின் தந்தை அவரிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    3 ஆண்டுகளாக அவர் தன்னிடம்  பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக சிறுமி கூறினார்.

    இதையடுத்து பத்தனம்திட்டா போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியின்  தந்தையை கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு பத்தனம்திட்டா விரைவு  கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் நேற்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். அதில், தந்தையே  சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது  மன்னிக்க முடியாத குற்றமாகும். இது போஸ்கோ சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டியது.

    எனவே இந்த குற்றத்தில் ஈடுபட்ட சிறுமியின் தந்தைக்கு மூன்று ஆயுள் தண்டனை விதிக்கிறேன். இதை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்  என  உத்தரவிட்டார்.
    Next Story
    ×