search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்னல் தாக்கி காயம் அடைந்தவர்
    X
    மின்னல் தாக்கி காயம் அடைந்தவர்

    ராஜஸ்தானில் மின்னல் தாக்கி இருவர் பலி

    வட மாநிலங்களில் கனத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
    உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்று காலை உத்தர பிரதேச மாநிலம் மதுரா, டெல்லியில் கனமழை பெய்தது.

    மழை வெள்ளத்தில் சிக்கிய கார்

    இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கஞ்ச் பகுதியில் மின்னல் தாக்கி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான உதவிகள் செய்து கொடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×