என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதியில் இயற்கை பொருட்களில் தயாரித்த உணவு விற்பனைக்கு திடீர் தடை
Byமாலை மலர்31 Aug 2021 7:19 AM GMT (Updated: 31 Aug 2021 7:19 AM GMT)
ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தினசரி இலவசமாக அன்னதானம் வழங்கப்படுகிறது.
திருப்பதி:
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இயற்கை வேளாண் பொருட்களை கொண்டு மலிவு விலையில் உணவு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கான சோதனை ஓட்டம் கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த திட்டத்தை ரத்து செய்வதாக தேவஸ்தானம் நேற்று அதிரடியாக அறிவித்தது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தினசரி இலவசமாக அன்னதானம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இயற்கை வேளாண் பொருட்களை கொண்டு பக்தர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க திட்டமிடப்பட்டது. அறங்காவலர் குழுவின் அனுமதி பெறாமல் இந்த திட்டம் தொடங்கப்படுவதால் இதனை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்.
புதிய அறங்காவலர் குழுவின் தலைவராக மீண்டும் நான் தேர்வாகியுள்ளேன். ஆனால் இன்னும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவில்லை.
இதுபோன்ற நிலையில் தன்னிச்சையாக அதிகாரிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். எனவே ரத்து செய்கிறோம். காலம் காலமாக வழங்கப்படும் இலவச உணவு முறை தொடரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இயற்கை வேளாண் பொருட்களை கொண்டு மலிவு விலையில் உணவு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கான சோதனை ஓட்டம் கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த திட்டத்தை ரத்து செய்வதாக தேவஸ்தானம் நேற்று அதிரடியாக அறிவித்தது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தினசரி இலவசமாக அன்னதானம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இயற்கை வேளாண் பொருட்களை கொண்டு பக்தர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க திட்டமிடப்பட்டது. அறங்காவலர் குழுவின் அனுமதி பெறாமல் இந்த திட்டம் தொடங்கப்படுவதால் இதனை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்.
புதிய அறங்காவலர் குழுவின் தலைவராக மீண்டும் நான் தேர்வாகியுள்ளேன். ஆனால் இன்னும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவில்லை.
இதுபோன்ற நிலையில் தன்னிச்சையாக அதிகாரிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். எனவே ரத்து செய்கிறோம். காலம் காலமாக வழங்கப்படும் இலவச உணவு முறை தொடரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X