என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகளின் மண்டையை உடையுங்க... அடாவடியாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை பாய்கிறது
Byமாலை மலர்29 Aug 2021 12:43 PM GMT (Updated: 29 Aug 2021 12:43 PM GMT)
பாஜக தலைவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்திய விவகாரம் மாநிலம் முழுவதும் விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:
அரியானா மாநிலத்தில் பாஜக தலைவர்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பேராட்டங்களின்போது சில சமயம் வன்முறையும் ஏற்படுகிறது. நேற்று கர்னால் மாவட்டத்தில் பாஜக தலைவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது ஒருபுறமிருக்க, பாஜக தலைவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளின் மண்டையை உடைக்கும்படி போலீசாரிடம் கர்னால் துணைக் கோட்ட ஆட்சியர் ஆயுஷ் சின்கா உத்தரவிட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் போலீசாரிடம் பேசுவது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. பாஜக எம்பி வருண் காந்தி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அந்த அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், விவசாயிகளின் மண்டையை உடைக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா இன்று தெரிவித்தார்.
“ஐஏஎஸ் அதிகாரியின் வீடியோ வைரலாகியுள்ளது. அந்த அதிகாரி பின்னர் விளக்கம் அளித்தார். அதில், இரண்டு நாட்களாக தூங்காமல் வேலை செய்ததால் இப்படி நடந்துகொண்டதாக ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால் விவசாயிகள் 365 நாட்கள் தூங்கவில்லை என்பதை அவர் தெரிந்துகொள்ளவேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என சவுதாலா கூறினார்.
இதையும் படியுங்கள்... அரியானாவில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி - ராகுல் காந்தி கண்டனம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X