search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி
    X
    தடுப்பூசி

    இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 63 கோடியை தாண்டியது

    நாடு முழுவதும் இன்று 65,39,745 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16-ந்தேதி தொடங்கியது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்குடன் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. 

    ஆரம்பத்தில் தடுப்பூசி தொடர்பான அச்சம், தடுப்பூசி கிடைப்பதில் தாமதம் போன்ற காரணங்களால் குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல் 10 கோடி தடுப்பூசி போடுவதற்கு 83 நாட்கள் ஆனது. அதன்பின்னர் தடுப்பூசி போடும் பணி வேகமெடுத்தது. 

    இதனால் 2-வது 10 கோடி தடுப்பூசி 45 நாட்களிலும், 3-வது 10 கோடி தடுப்பூசி 29 நாட்களிலும், 4-வது 10 கோடி  24 நாட்களிலும், 5-வது 10 கோடி தடுப்பூசி 20 நாட்களிலும் எட்டிப்பிடித்து கடந்த 7ம்தேதி 50 கோடி என்ற நிலையை எட்டியது. 

    நாடு முழுவதும் மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை கடந்த 25ம் தேதி 60 கோடியை கடந்தது. நேற்று ஒரே நாளில் ஒரு கோடி நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

    இந்நிலையில், நாடு முழுவதும் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை இன்று 63 கோடியை கடந்துள்ளது. இன்று மாலை 7 மணி நிலவரப்படி 63,00,67,629 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று 65,39,745 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×