என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாதிப்பு விகிதம் 19.22 சதவீதம்- கேரளாவில் இன்று 32,801 பேருக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்27 Aug 2021 4:19 PM GMT (Updated: 27 Aug 2021 4:19 PM GMT)
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 179 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
திருவனந்தபுரம்:
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் பாதிப்பு அதிக அளவிலேயே உள்ளது. மொகரம் மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி ஊரடங்கில் அரசு தளர்வுகளை அறிவித்த நிலையில், பாதிப்பு உயர்ந்துள்ளது. எனவே, மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கேரளாவில் 32,801 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 3வது நாளாக புதிய பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது. பாதிப்பு விகிதம் 19.22 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 179 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 18,573 பேர் குணமடைந்துள்ளனர். 1,95,254 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திராவில் புதிய பாதிப்பு 1,515 ஆகவும், உயிரிழப்பு 10 ஆகவும் உள்ளது. 903 பேர் குணமடைந்துள்ளனர். 15,050 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் இன்று 1301 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 17 பேர் இறந்துள்ளனர். 1616 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 18,970 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X