search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானம் விழுந்த பகுதியில் தீப்பற்றி எரியும் காட்சி
    X
    விமானம் விழுந்த பகுதியில் தீப்பற்றி எரியும் காட்சி

    பயிற்சியின்போது விழுந்து தீப்பிடித்த இந்திய போர் விமானம்

    ராஜஸ்தானில் பயிற்சியின்போது விமானம் விபத்துக்குள்ளானது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக விமானப்படை கூறி உள்ளது.
    பார்மர்:

    ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 பைசன் ரக போர் விமானத்தில் வீரர்கள் வழக்கமான பயிற்சி மேற்கொண்டனர். அப்போது, விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து தீப்பிடித்தது. ஆனால் விமானம் தரையை நோக்கி பாய்ந்தபோது அதில் இருந்த விமானி, வெளியே குதித்ததால் காயங்களுடன் உயிர்தப்பினார்.

    இத்தகவலை விமானப்படை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இன்று மாலை 5.30 மணியளவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விழுந்தாகவும், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் விமானப்படை கூறி உள்ளது.
    Next Story
    ×