என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பயிற்சியின்போது விழுந்து தீப்பிடித்த இந்திய போர் விமானம்
Byமாலை மலர்25 Aug 2021 2:47 PM GMT (Updated: 25 Aug 2021 2:47 PM GMT)
ராஜஸ்தானில் பயிற்சியின்போது விமானம் விபத்துக்குள்ளானது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக விமானப்படை கூறி உள்ளது.
பார்மர்:
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 பைசன் ரக போர் விமானத்தில் வீரர்கள் வழக்கமான பயிற்சி மேற்கொண்டனர். அப்போது, விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து தீப்பிடித்தது. ஆனால் விமானம் தரையை நோக்கி பாய்ந்தபோது அதில் இருந்த விமானி, வெளியே குதித்ததால் காயங்களுடன் உயிர்தப்பினார்.
இத்தகவலை விமானப்படை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இன்று மாலை 5.30 மணியளவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விழுந்தாகவும், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் விமானப்படை கூறி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X