என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியுரிமை திருத்தச்சட்டம் ஏன்? - மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி விளக்கம்
Byமாலை மலர்22 Aug 2021 9:27 PM GMT (Updated: 22 Aug 2021 9:27 PM GMT)
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
புதுடெல்லி:
வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மையின மக்களாக வசிக்கும் இந்து, சீக்கியர் உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு, நம் நாட்டில் குடியுரிமை வழங்க மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்தது. இதற்காக, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து 2019ம் ஆண்டு பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளதை அடுத்து, அங்கு சிக்கித் தவிக்கும் மக்களை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சிகளில், மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அங்கிருந்து நூற்றுக்கணக்கான இந்துக்களும், சீக்கியர்களும் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய பெட்ரோலியத் துறை மந்திரியும் , பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:
ஆப்கானிஸ்தானில் நடக்கும் சமீபத்திய நிகழ்வுகளால் அங்குள்ள சீக்கிய மற்றும் இந்து மக்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவே நாம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இயற்றினோம் என குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X