search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குப்கார் கூட்டமைப்பு தலைவர்கள்
    X
    குப்கார் கூட்டமைப்பு தலைவர்கள்

    ஜம்மு காஷ்மீர் - குப்கார் கூட்டமைப்பு தலைவர்கள் நாளை ஆலோசனை

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி நாளை கூடுகிறது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பவை போன்ற கோரிக்கைகளுடன் குப்கார் அறிக்கைக்கான கூட்டமைப்பு  உருவாக்கப்பட்டு உள்ளது. 

    இந்தக் கூட்டமைப்பில் ஆறு முன்னணி அரசியல் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. குப்கார் கூட்டமைப்பின் தலைவராக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா உள்ளார்.  

    இந்நிலையில், இந்தக் கூட்டமைப்பின் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. பரூக் அப்துல்லாவின் இல்லத்தில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்க கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

    இந்தக் கூட்டத்தில் 150- 200 அரசியல் தலைவர்கள் பங்கேற்பார்கள் எனவும், முந்தைய கூட்டத்தைப் போல இது இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×