என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு காஷ்மீர் - குப்கார் கூட்டமைப்பு தலைவர்கள் நாளை ஆலோசனை
Byமாலை மலர்22 Aug 2021 5:46 PM GMT (Updated: 22 Aug 2021 5:46 PM GMT)
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி நாளை கூடுகிறது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பவை போன்ற கோரிக்கைகளுடன் குப்கார் அறிக்கைக்கான கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கூட்டமைப்பில் ஆறு முன்னணி அரசியல் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. குப்கார் கூட்டமைப்பின் தலைவராக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா உள்ளார்.
இந்நிலையில், இந்தக் கூட்டமைப்பின் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. பரூக் அப்துல்லாவின் இல்லத்தில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்க கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் 150- 200 அரசியல் தலைவர்கள் பங்கேற்பார்கள் எனவும், முந்தைய கூட்டத்தைப் போல இது இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X