என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வைரஸ் இன்னும் தலைக்கு மேல் கத்தியாக உள்ளது: உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
Byமாலை மலர்20 Aug 2021 1:58 AM GMT (Updated: 20 Aug 2021 1:58 AM GMT)
கொரோனா தொற்று அபாயம் இன்னும் சென்றுவிடவில்லை. உயிரிழப்புகளை தடுக்க கொரோனா சிகிச்சை மையங்களுடன் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களும் அமைக்கப்படுவது நல்ல விஷயமாகும்.
மும்பை :
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று பால்கர் மாவட்ட நிர்வாக அலுவலக கட்டிடம், வசாய் விராரில் மாநகராட்சி, அரசு சுகாதார மையத்தை திறந்து வைத்தார். மெய்நிகரில் முறையில் நடந்த கட்டிட திறப்பு விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-
கொரோனா வைரஸ் இன்னும் நமது தலைக்கு மேல் கத்தியாக தொங்கி கொண்டு இருக்கிறது. கொரோனா தொற்று அபாயம் இன்னும் சென்றுவிடவில்லை. உயிரிழப்புகளை தடுக்க கொரோனா சிகிச்சை மையங்களுடன் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களும் அமைக்கப்படுவது நல்ல விஷயமாகும்.
பால்கர் மாநிலத்தின் மற்ற பகுதிகளை காட்டிலும் வித்தியாசமானது. இங்கு வனப்பகுதி, கடற்கரை, நிறைந்த பழங்குடியின கலாசாரம், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன. எனினும் மும்பைக்கு அருகில் இருப்பதால் பால்கர் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்தது. ஆனால் எதிர்காலத்தில் அது நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் துணை முதல்-மந்திரி அஜித்பவார், மந்திரிகள் ஏக்நாத் ஷிண்டே, தாதா புசே, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று பால்கர் மாவட்ட நிர்வாக அலுவலக கட்டிடம், வசாய் விராரில் மாநகராட்சி, அரசு சுகாதார மையத்தை திறந்து வைத்தார். மெய்நிகரில் முறையில் நடந்த கட்டிட திறப்பு விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-
கொரோனா வைரஸ் இன்னும் நமது தலைக்கு மேல் கத்தியாக தொங்கி கொண்டு இருக்கிறது. கொரோனா தொற்று அபாயம் இன்னும் சென்றுவிடவில்லை. உயிரிழப்புகளை தடுக்க கொரோனா சிகிச்சை மையங்களுடன் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களும் அமைக்கப்படுவது நல்ல விஷயமாகும்.
பால்கர் மாநிலத்தின் மற்ற பகுதிகளை காட்டிலும் வித்தியாசமானது. இங்கு வனப்பகுதி, கடற்கரை, நிறைந்த பழங்குடியின கலாசாரம், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன. எனினும் மும்பைக்கு அருகில் இருப்பதால் பால்கர் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்தது. ஆனால் எதிர்காலத்தில் அது நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் துணை முதல்-மந்திரி அஜித்பவார், மந்திரிகள் ஏக்நாத் ஷிண்டே, தாதா புசே, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X