என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜார்க்கண்ட் நீதிபதி கொலையில் துப்பு கொடுப்போருக்கு ரூ.5 லட்சம் பரிசு - சிபிஐ அறிவிப்பு
Byமாலை மலர்16 Aug 2021 12:15 AM GMT (Updated: 16 Aug 2021 12:15 AM GMT)
நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய ஜார்க்கண்ட் நீதிபதி கொலை தொடர்பான விசாரணையை ஜார்க்கண்ட் ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் கண்காணித்து வருகிறது.
புதுடெல்லி:
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதியாக பணியாற்றி வந்த உத்தம் ஆனந்த் (49) என்பவர், கடந்த மாதம் 28-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். நடைபயிற்சிக்கு சென்ற அவரை ஆட்டோவால் மோதி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் இந்த வழக்கை மாநில அரசு சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது.
இந்நிலையில், விசாரணையை தொடங்கி உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் இந்தக் கொலை தொடர்பாக துப்பு கொடுப்போருக்கு பரிசு அறிவித்துள்ளனர்.
அந்த வகையில் நீதிபதி கொலை தொடர்பாக யாரிடமாவது முக்கிய தகவல் எதுவும் இருந்தால், சி.பி.ஐ. அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். அவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இதற்கான தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X