search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த காட்சி.
    X
    திருப்பதியில் துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த காட்சி.

    திருப்பதியில் துர்கா ஸ்டாலின் தரிசனம்

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் குடும்பத்தினருடன் சென்று துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
    திருப்பதி:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்தார். தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்றனர். பத்மாவதி தாயார் தங்கும் விடுதியில் தங்கினார்.

    வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் லட்டு பிரசாதம் மற்றும் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

    இதையடுத்து திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்தார். குங்கும அர்ச்சனையில் துர்கா ஸ்டாலின் பங்கேற்று மூலவர் மற்றும் உற்சவர் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தார்.

    அவருக்கு கோவில் அதிகாரிகள் பிரசாதங்கள் வழங்கினர்.
    Next Story
    ×