search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கேரளாவில் இன்று 18607 பேருக்கு கொரோனா பாதிப்பு

    கேரளாவில் இன்று 20,108 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,34,196  சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டதில், 18,607 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு விகிதம் 13.87 சதவீதமாக உள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35,52,525 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 93 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 17,747 ஆக அதிகரித்துள்ளது.

    இன்று 20,108 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1,76,572 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

    மலப்புரம் (3,051), திருச்சி (2,472), கோழிக்கோடு (2,467), எர்ணாகுளம் (2,216), பாலக்காடு (1,550), கொல்லம் (1,075), கண்ணூர் (1,012), கோட்டயம் (942), ஆலப்புழா (941), திருவனந்தபுரம் (933) ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவாகி உள்ளது.
    Next Story
    ×