என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநிலங்களவையில் கடும் அமளி... 6 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
Byமாலை மலர்4 Aug 2021 1:07 PM GMT (Updated: 4 Aug 2021 1:07 PM GMT)
மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கங்கள் எழுப்பினர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், பெகாசஸ் உளவு விவகாரம், புதிய வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தினமும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி வருகின்றன. குறிப்பாக, பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், மத்திய அரசு அதை ஏற்கவில்லை. எனவே, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக கைகோர்த்து ஒற்றுமையாக செயல்பட எதிர்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.
இன்றும் எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கங்கள் எழுப்பினர். மாநிலங்களவையை தொடர்ந்து முடக்கும் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
அதன்படி, டோலா சென், நதிமுல் ஹக், அபீர் ரஞ்சன் பிஸ்வாஸ், சாந்தா சேத்ரி, அர்பிதா கோஷ், மவுசம் நூர் ஆகிய 6 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதன்பிறகும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி நீடித்தது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், பெகாசஸ் உளவு விவகாரம், புதிய வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தினமும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி வருகின்றன. குறிப்பாக, பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், மத்திய அரசு அதை ஏற்கவில்லை. எனவே, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக கைகோர்த்து ஒற்றுமையாக செயல்பட எதிர்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.
இன்றும் எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கங்கள் எழுப்பினர். மாநிலங்களவையை தொடர்ந்து முடக்கும் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
அதன்படி, டோலா சென், நதிமுல் ஹக், அபீர் ரஞ்சன் பிஸ்வாஸ், சாந்தா சேத்ரி, அர்பிதா கோஷ், மவுசம் நூர் ஆகிய 6 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதன்பிறகும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி நீடித்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X