search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களவை
    X
    மாநிலங்களவை

    மாநிலங்களவையில் கடும் அமளி... 6 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

    மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கங்கள் எழுப்பினர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், பெகாசஸ் உளவு விவகாரம், புதிய வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தினமும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி வருகின்றன. குறிப்பாக, பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    ஆனால், மத்திய அரசு அதை ஏற்கவில்லை. எனவே, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக கைகோர்த்து ஒற்றுமையாக செயல்பட  எதிர்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

    இன்றும் எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கங்கள் எழுப்பினர். மாநிலங்களவையை தொடர்ந்து முடக்கும் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

    அதன்படி, டோலா சென், நதிமுல் ஹக், அபீர் ரஞ்சன் பிஸ்வாஸ், சாந்தா சேத்ரி, அர்பிதா கோஷ், மவுசம் நூர் ஆகிய 6 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதன்பிறகும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி நீடித்தது.
    Next Story
    ×