என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுதந்திர தின விழாக்களில் அதிக கூட்டம் வேண்டாம்- மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
Byமாலை மலர்4 Aug 2021 4:11 AM GMT (Updated: 4 Aug 2021 4:11 AM GMT)
சுதந்திர தினவிழாவை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
புதுடெல்லி:
நாட்டின் 74-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திரமோடி தேசியக்கொடியை ஏற்றி வைப்பார்.
தமிழ்நாட்டில் அரசு சார்பில் கோட்டையில் சுதந்திர தினவிழா நடைபெறும். இதில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார்.
இதேபோல மாநில அளவில் அனைத்து மாநில முதல்- மந்திரிகளும் தேசியக் கொடியை ஏற்றுவார்கள். மாவட்ட அளவில் கலெக்டர்கள் கொடி ஏற்றுவார்கள். மேலும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் போன்றவற்றிலும் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெறும்.
சுதந்திர தினவிழாவை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆனால் தற்போது கொரோனா காலம் என்பதால் விழாவை கோலாகலமாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டங்களில் அதிக மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா பரவல் நீடித்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் சுதந்திர தினவிழா நடப்பதால் நோய் தொற்று மேலும் பரவிவிடும் வாய்ப்பை ஏற்படுத்தக் கூடாது. எனவே சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கெடுப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும். கூட்டம் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சமூகவலைதளம் மூலமாக காட்சிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
கொரோனா எதிர்ப்பில் போராடிய டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களை சுதந்திர தின விழாவில் கவுரவிக்க வேண்டும். எனவே அவர்களுக்கு அழைப்பு விடுத்து விழாவில் பங்கேற்க செய்யலாம். மேலும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களையும் விழாவுக்கு அழைக்கலாம்.
தேச பக்தி, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் கருத்துக்களை சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் மக்களிடம் பரப்ப வேண்டும். தேசபக்தி பாடல்களை ஒளிபரப்பு செய்ய வேண்டும்.
முக்கிய இடங்கள், முக்கிய பொது கட்டிடங்கள் ஆகியவற்றில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும். மேலும் அவற்றை வண்ண விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும்.
‘ஆத்மநிர்பார் பாரத்’ பொருளாதார திட்டம் போன்றவற்றை மக்களிடம் பரப்பும் வகையில் பிரசாரங்கள் செய்யப்பட வேண்டும். விழா கொண்டாடப்படும் இடங்களில் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளி, கட்டாயமாக முககவசம் அணிதல், அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டும்.
நாட்டின் 74-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திரமோடி தேசியக்கொடியை ஏற்றி வைப்பார்.
தமிழ்நாட்டில் அரசு சார்பில் கோட்டையில் சுதந்திர தினவிழா நடைபெறும். இதில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார்.
இதேபோல மாநில அளவில் அனைத்து மாநில முதல்- மந்திரிகளும் தேசியக் கொடியை ஏற்றுவார்கள். மாவட்ட அளவில் கலெக்டர்கள் கொடி ஏற்றுவார்கள். மேலும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் போன்றவற்றிலும் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெறும்.
சுதந்திர தினவிழாவை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆனால் தற்போது கொரோனா காலம் என்பதால் விழாவை கோலாகலமாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டங்களில் அதிக மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது சம்பந்தமாக மத்திய உள்துறையில் இருந்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
அதே நேரத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சமூகவலைதளம் மூலமாக காட்சிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
கொரோனா எதிர்ப்பில் போராடிய டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களை சுதந்திர தின விழாவில் கவுரவிக்க வேண்டும். எனவே அவர்களுக்கு அழைப்பு விடுத்து விழாவில் பங்கேற்க செய்யலாம். மேலும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களையும் விழாவுக்கு அழைக்கலாம்.
தேச பக்தி, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் கருத்துக்களை சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் மக்களிடம் பரப்ப வேண்டும். தேசபக்தி பாடல்களை ஒளிபரப்பு செய்ய வேண்டும்.
முக்கிய இடங்கள், முக்கிய பொது கட்டிடங்கள் ஆகியவற்றில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும். மேலும் அவற்றை வண்ண விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும்.
‘ஆத்மநிர்பார் பாரத்’ பொருளாதார திட்டம் போன்றவற்றை மக்களிடம் பரப்பும் வகையில் பிரசாரங்கள் செய்யப்பட வேண்டும். விழா கொண்டாடப்படும் இடங்களில் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளி, கட்டாயமாக முககவசம் அணிதல், அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... தமிழகம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு வருவோருக்கு புதிய கட்டுப்பாடு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X