search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஞ்சய் ராவத்
    X
    சஞ்சய் ராவத்

    புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களை வைத்து பாஜக சிவசேனாவை குறிவைக்கிறது - சஞ்சய் ராவத்

    சிவசேனாவை எதிர்த்தவர்கள் அரசியலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
    மும்பை:

    பா.ஜ.க. எம்.எல்.சி. பிரசாத் லாட் சமீபத்தில், தேவைப்பட்டால் மும்பையில் உள்ள சிவசேனாவின் தலைமையகமான சேனா பவனை தகர்ப்போம் என கூறினார். இவர் தேசியவாத காங்கிரசில் இருந்தவர் ஆவார். கடந்த 2016-ம் ஆண்டு தான் பா.ஜ.க.வில் சேர்ந்தார்.

    இந்நிலையில், கட்சியில் புதிதாகச் சேர்ந்தவர்களை வைத்து, பா.ஜ.க. சிவசேனாவை குறிவைக்கிறது என சஞ்சய் ராவத் எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

    எங்களை குறிவைக்க மகாராஷ்டிரா பா.ஜ.க.வில் புதிதாகச் சோ்ந்தவர்களின் உதவியைப் பெற்று இருப்பது துரதிருஷ்டவசமானது. ஆட்சியில் பங்கு கிடைக்கும் என சிலர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.க.வில் சேர்ந்தனர். தற்போது பா.ஜ.க. ஆட்சியில் இல்லாததால் அவர்கள் பதற்றத்தில் உள்ளனர் என்றார்.
    Next Story
    ×