search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய்
    X
    மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய்

    தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை- பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி அறிவிப்பு

    கொங்கு மண்டலத்தை பிரித்து தனி மாநிலம் அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்தன. தமிழக எம்.பி.க்கள் பாரிவேந்தர், ராமலிங்கம் ஆகியோர் இது சம்பந்தமாக மக்களவையில் கேள்வி ஒன்றை எழுத்துப்பூர்வமாக எழுப்பினார்கள்.
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தை பிரித்து தனி மாநிலம் அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்தன.

    இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொங்கு மண்டல பகுதிகளில் உள்ள ஒரு சில அமைப்புகளும் இதற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்தன. அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சிகள் அனைத்தும் இதற்கு கண்டனம் தெரிவித்தன. ஆனாலும் ஆதரவு, எதிர்ப்பு கருத்துக்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தன.

    இது சம்பந்தமாக மத்திய, மாநில அரசுகள் தரப்பிலும் தெளிவான பதில்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. இதனால் மக்கள் மத்தியில் ஒரு குழப்பமான நிலை நிலவியது.

    பாராளுமன்றம்

    இந்தநிலையில் பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினை இன்று எதிரொலித்தது. தமிழக எம்.பி.க்கள் பாரிவேந்தர், ராமலிங்கம் ஆகியோர் இது சம்பந்தமாக மக்களவையில் கேள்வி ஒன்றை எழுத்துப்பூர்வமாக எழுப்பினார்கள்.

    இதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

    அதில், ‘‘தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் எந்த கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை’’ என்று கூறினார்.

    மத்திய மந்திரியின் இந்த பதில் மூலம் மாநில பிரிவினை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    கொங்கு மண்டலத்தையோ அல்லது மற்ற பகுதிகளையோ தமிழகத்தில் இருந்து தனியாக பிரிக்கும் எண்ணம் இனி யாருக்கும் வராத வகையில் மத்திய அரசு சிறந்த அறிவிப்பை இன்று வெளியிட்டு இருக்கிறது.


    Next Story
    ×