
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
கொரோனா தொற்று பாதிப்பால் நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில் மத்திய கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவை இன்று வெளியிட்டது. மாணவ-மாணவிகள் results.nic.in., cbse.gov.in ஆகிய இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இது தவிர digilocker, unmang ஆகிய செயலிகள் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
சென்னை மண்டலத்துக்குட்பட்ட தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்து இருந்தனர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.