search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆபாச படம், வீடியோ எடுத்து 300 பெண்களை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது

    ஆந்திர மாநிலத்தில் ஆபாச படம், வீடியோ எடுத்து 300 பெண்களை மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடப்பா:

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பிரட்டாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னகுமார். 23 வயதான இவர் பி.டெக் படிப்பை பாதியில் முடித்து விட்டு பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

    இவர் பாதிக்கப்பட்ட பல்வேறு பெண்களை ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு அறிமுகம் ஆனார். அவர்களுடன் நெருக்கமாக இருக்கும்போது போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளார். அதை வைத்து அவர் பெண்களை மிரட்டி பணம் பறித்துள்ளார்.

    ஐதராபாத், விஜயவாடா மற்றும் கடப்பா பகுதியைச் சேர்ந்த 200 சிறுமிகள், 100 நடுத்தர பெண்கள் ஆக மொத்தம் 300 பேரிடம் ஆபாச படம், வீடியோவை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார்.

    இது தொடர்பாக எந்த பெண்ணும் புகார் கொடுக்கவில்லை. வீடு புகுந்து கொள்ளை, செயின் பறிப்பு வழக்கில் பிரசன்ன குமாரை போலீசார் கைது செய்தபோதுதான் இந்த தகவல் தெரிய வந்தது.

    2017-ம் ஆண்டு முதல் அவர் பெண்களை மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து ரூ.61 லட்சம் பணம் மற்றும் 30 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×